Skip to content

அமேரிக்கத் தமிழ் மருத்துவர்கள்

Sep-04-10

:நன்றி:

Technorati Tags: , ,

ஜோடி வெங்கடேசன்

Aug-29-10

’ஜோடி வெங்கடேசன்’ என்றவுடன் ஏதோவொரு தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது புது திரைப்படத் தலைப்பு என நினைத்துவிட வேண்டாம். உயிரே போகிற விதயமானாலும் -- ஒன்றுக்கும் உதவாத விதயமானாலும் சரி, எடுத்ததெற்கெல்லாம் சினிமாவை ஒப்பிடும் பெருமை வாய்ந்தது தற்போதைய தமிழ்க் குமுகாயம் . எச்சரிக்கையாக ஒரு விளக்கக் குறிப்பு. Jody என்பது அமேரிக்காவில் ஓரளவு பரவலாய் உள்ள ஆண்பால் பெயர். Jodi(e) பெண்பால் பெயர். மற்றும் இப்பதிவின் நாயகர் பெயர் ஜோடி வெங்கடேசன்.

ஜோடியின் தந்தை ஷேன் வெங்கடேசன் புலம் பெயர்ந்த தமிழர். நியு யோர்க் மாநிலத்தில் பிறந்த ஜோடி, அமேரிக்க ராணுவத்தில் பணி புரிந்தவர். படிப்பறிவால், திறமையால் தலைமை கணக்காளர். அவர் சார்ந்துள்ள கிருத்துவ கோவிலில் டீக்கன் ஆக இருப்பவர். மூன்று குழந்தைச் செல்வங்களைப் பெற்ற ஜோடி, மனைவி லோவிஸ் உடன் மேரிலாந்தில் வாழ்ந்து வருகிறார். நாட்டுப்பற்றிலும் மக்கள் சேவையிலும் ஈடுபாடுள்ள ஜோடி, மேரிலாந்து மாநில செனட் ற்கான 13 வது மாவட்ட குடியரசு கட்சி வேட்பாளராக வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

jody V 1

பொருளாதாரம் தறிகெட்டு ஓடிக் கொண்டுள்ள நிலையில், மேரிலாந்து மாநிலம், ஜோடி போன்ற அரசியல் எளிமையாளர்களை அரசாளும் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அமேரிக்க அரசியலில் தெற்காசிய பின்புல வேட்பாளார்கள் வெகு அபூர்வமாய் ஈடுபட்ட காலம் போயே போய்விட்டது. பெரும்பான்மையாக வசிக்கும் மாநிலங்கள் என்றில்லாமல், குறைந்த எண்ணிக்கையிலிருக்கும் ஊர்களில் கூட தெற்காசியர்கள் ஆர்வத்துடன் அரசியலில் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர். வெகுவாக வரவேற்கப்பட வேண்டிய மாற்றம். அரசியல் என இல்லாமல் ஊடக செய்தித்துறைகளிலும் தெற்காசியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சி என் என் ல் -- ஃபரிட் ஸேக்கேரியா, அலி வெல்ஷீ, சஞ்சய் குப்தா, பொதுத் தொலைக்காட்சியின் ஹரி சீரினிவாசன் மற்றும் ஞாயிறு காலை அரசியல் அலசல் _கூச்சல் நிகழ்ச்சிகளில் தெற்காசிய பின் புலங்களுடனான ரமேஷ் பொன்னுரூ போன்றோர் பங்கேற்பது சாதாரணமாகிவிட்டது.

இச்சூழலில் ஜோடி வெங்கடேசன் போன்றவர்களை அமேரிக்கத் தமிழர்கள் ஆர்வத்துடன் ஆதரிக்க முன்வர வேண்டும். முக்கியமாக கிழக்குக்கரை மும்மாநில அமேரிக்கா வாழ்தமிழர்கள் ஒன்றிணைந்து, முடிந்த அளவு கொடை அளிக்க வேண்டும்; வேட்பாளருக்கு ஆதரவான பேச்சாடல்களில் ஈடுபட வேண்டும். படிப்படியாக அமெரிக்காவில், “தமிழர்கள்” தங்களுக்கென ஒரு இடத்தை நிறுவ முடிந்தால், நம் ஈழச்சகோதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அவலங்களுக்கு, நம்மின மக்களுக்கு சொல்லொண்ணா இன்னற் விளைவித்த எதிரிகளுக்கு, எதிரிகளுக்கு உதவிய நாடுகளுக்கு பாடம் கற்பிக்க வழி பிறக்கலாம். வரும் காலமாவது ஈழத்தமிழனுக்கு அமைதியாக அமைய வழி வகுக்கலாம். நினைக்கவே பெரும் மலைப்பாய்த் தோன்றினாலும், இது நிகழ்த்தக்கூடியதுதான். கவனமாக காய்களை நகர்த்தினால் செய்ய முடியாதது இல்லை.

ஜோடி வெங்கடேசனின் அண்மைய பேச்சு -- காணொளி:

Technorati Tags: , , ,

?..சுதந்திரநாள்..?

Aug-14-10

நினைவு தெரிந்து வாழ்ந்த பதினைந்து ஆண்டு கால இந்திய(யா) வாழ்வில், சுதந்திரநாள் பெரிதாக கொண்டாடப்பட்டதாக ஞாபகம் இல்லை. இலவச மிட்டாய்களுடன் கூடிய பள்ளி இல்லாத மகிழ்ச்சி சிறார்களுக்கு. ஊரில் சில முக்கூட்டுகளில் கொடியேற்றம், புளித்துப் போன அரசியல்வாதி பேச்சுகள்; விதிவிலக்காக ஓரிரு தியாகிகளுக்கு நன்றி செலுத்தல்.

ஓகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாளில்:

அமேரிக்காவில் தெற்காசிய மக்கட்தொகை கணிசமாக உள்ள பெருநகரங்களில், “இந்திய சுதந்திர நாள்” இந்திய மொழி வாரி சங்கங்களால் கொண்டாடப்படவுள்ளது. பல வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருப்பது போலவே கொண்டாட்ட ஊர்வலங்கள்..இத்யாதிகள், இந்த வருடமும். அமேரிக்காவில் வாழ்ந்து கொண்டு, இந்திய மூவர்ணத்தில் உடையணிந்து காட்சியளிப்பர் பலர்.

3831051366_3e3c510d39_z

உள்ளூர் நகரத் தந்தை அல்லது செனடர் முக்கிய விருந்தாளியாக பங்கெடுத்து, எப்போதும் பலரும் சொல்வதைப் போலவே இந்திய புலம் பெயர்ப்பாளிகளை ஆகா! ஓகோ! என புகழ்வர். ஆயினும் கொண்டாட்டக் கூட்டத்தில் பங்கு பெறுவோர் பலர் இந்தியராயிருந்து அமேரிக்க குடிமகன்கள் ஆனவர்கள்; பிறர், கிடைக்கும் முதல் வாய்ப்பில் அமேரிக்க குடிமகன்களாக மாற முனைப்புடன் காத்திருப்பவர்கள். இந்திய ஆங்கில வாரயிதழ்களில் கொண்டாட்டத்தின் படங்கள் வாரக்கடைசியில் பங்கு பெறும், எப்பொழுதும் போலவே.

ஏன் இங்கே -இந்நாட்டில் இந்த கொண்டாட்டம்..? இது எனக்குப் பிடிபடாத ஒரு விடயம். எதை இவர்கள் கொண்டாடுகிறார்கள்..? இந்திய நடுவணரசையா.?

8.15.47 அன்று நாடாளும் உரிமை இங்கிலாந்து அரசிடமிருந்து, மத்தியிலிருந்து ஆளும் இந்தியர்களுக்கு கை மாறியது. இந்நாளை விழாவாக கொண்டாடுவது நம்முடைய மொழி, குமுகாயம், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டாடுவதே அல்ல. முற்றிலுமாக இல்லை. நம்முடைய கலாச்சாரம் மற்றும் நாம் யாரென்பதற்கும் – இந்திய அரசாங்கத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நம் இனம், சார்ந்த கலாசாரம் அதன் விழுமியங்கள், இந்திய அரசை சார்ந்திராத ஆழ்ந்த, நீண்ட கால பாரம்பரியத்தைக் கொண்டவொன்று. ஒரு அரசின் இருப்பை-இல்லாமையையும் கடந்து நீடித்திருக்கும்.

மேலும், பிரித்தானியர்கள் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்ற பின்னர் ஓடிவிட்ட 63 வருடங்களில் இந்திய நாட்டை ஆண்டவர்களால் இதுவரை,

1. ஏழ்மையை முறியடிக்க முடிந்ததா.. இல்லை.. எண்ணிக்கையில் உலகிலேயே ஏழைகள் அதிகம் உள்ள நாடு/ உலகின் ஏழைகள் 33% விழுக்காடு வாழும் நாடாகவே உள்ளது, இந்தியா.

2. குப்பை-கழிவு அகற்றுதல் , தடையற்ற மின்சார வரத்து மற்றும் தூய குடிநீர்..இன்றியமையாத இம்மூன்றிலும் இன்றுவரை பெருத்த ஏமாற்றங்களே..

3. ஆமை வேகத்தில் நகரும் நீதித்துறை மற்றும் பொருளுள்ளவர்களுக்கு ஒரு தரம் ஏனையோருக்கு வேறொரு தரம் என்றளவில் மருத்துவம்.

1930/40 களில் நிகழ்ந்த உணவு பஞ்சம் தற்போது இல்லை; மக்களின் கல்வியறிவு ஓரளவுக்கு உயர்ந்துள்ளது -நடுவர்க்கத்தின் வருமானம் உயர்ந்துள்ளது. இவைகளை மட்டுமே முன்னேற்றங்களாக கருதலாம். ஆயினும் இம்முன்னேற்றங்கள் நீடித்து, நிலைக்க இருப்பவைகளாய் இருந்தால் ஏன் பலரும் அரபு நாடுகளுக்கும், சிங்கை, ஆஸ்திரேலியா, கேனடா, அமேரிக்கா வென புலம் பெயர ஆலாய் பறக்கிறார்கள்..?

இப்படி ஆலப்பறப்பவர்கள் போலவே எனது குடும்பமும் புலம் பெயர்ந்தது. பல தலைமுறைகளாய் வாழ்ந்த மண்ணைவிட்டு பெயர்வது இனி முற்றிலும், அறவே அற்று போகும் மண் தொடர்பு என்பது தெரிந்திருந்தும் புலம் பெயர்ந்தோம்.. ஏன்..? வாய்ப்புகள் – வாய்ப்புகளின்மை.. – வளர வாய்ப்புகள் பிறந்த மண்ணில் இல்லை. எதிலும் அரசாங்கத்தின் கை நீட்டல், ஊழல்ல்ல்ல்ல். எம்மைப் போலவே புலம் பெயர்ந்தோரில் பெரும்பான்மையினர் தாங்களாகவே உணர்ந்து புலம் பெயர்ந்தவர்கள் என்றே என்னால் கணிக்கத் தோன்றுகிறது.

நாங்கள் வாழும் அமேரிக்க கூட்டு நாடுகளெனும் யு எஸ் ஏ – சொர்க்கபுரியன்று. இங்கும் வேலை வாய்ப்பின்மை, குற்றங்கள், இனவெறி என இன்னல்கள் நாளுமுண்டு. ஆயினும் ”இக்கணம் வரை” தவறுகள் செய்யாமல்-உழைக்கும் தனிமனிதன் தன் சுயமானத்தை இழக்காமல் வாழ ஏது இக்கட்டுகள் இல்லை இங்கே. இந்நாட்டின் குடிமகன் என்பது பெருமையையும், பொறுப்பையும் அளிப்பதாக உள்ளது. எங்களுடைய தனிப்பட்ட கருத்துகளுக்கு, வாழ்முறைகளுக்கு ஏதும் களங்கம் வந்துவிடவில்லை.

இந்நாட்டில் வசிப்போர் இந்திய அல்லது ஏனைய நாடுகளின் சுதந்திர நாளை ஏன் கொண்டாட வேண்டும்..? இது புரியாத புதிரே.. இந்திய சுதந்திர நாள் அவ்வளவு முக்கியமென்றால், தங்களுடன் பின்னி பிணைந்த ஒரு நாள் எனின், கொண்டாடுபவர்கள் இந்தியாவுக்குச் சென்று இந்தியர்களாக அங்கு கொண்டாடிக் களிக்க வேண்டும், இங்கல்ல. “நாம்” கொண்டாட இங்கு ஜுலை 4 , நீத்தார் (ராணுவ) நினைவு நாள் என நல்நாட்கள் பலவுள்ளன.

இந்திய சுதந்திர நாளை கொண்டாட துளியேனும் மன உந்துதல், அறவே இல்லை.

Technorati Tags: , , ,

பெற்றோர்கள் – 50 வருட திருமண வாழ்வு

Jul-13-10

07.14.1960 – தி.கோவிந்தராஜன் – மு. மங்கையர்கரசி

DAD-MOM 1

07.13.2010 – அரசி – ராஜன் பிள்ளை

MOM DAD 2010 - 11

Technorati Tags: , , , , , , ,

மேரத்தான்_பெண்மணி_

Oct-10-09

பாஸ்தாவும், புரித்தோக்களும், சேலட் ம் பழகிப் போய் பல காலமாகிவிட்டாலும், ஒரு வாய் மோர் சாதத்திற்கு வாய் ஏங்குதலுக்கு அடுத்ததாகச் சொல்லலாம், தமிழில் படித்தலும், எதையாவது கிறுக்குதலும். திணறும் பொருளாதாரத்தில், விழி பிதுங்கும் அமேரிக்க சிறு நிறுவனங்களின் உரிமையாளர்களில் ஒருவனான இப்பதிவனுக்கு, புலிவால் பிடித்த நாயராக தினமும் அல்லற் படுவதிலிருந்து சிறிது இளைப்பாற, தமிழில் எழுதத் தோன்றியது. தமிழில் எழுதி உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களின் அழகைக் கண்டு களித்தால் போதுமெனத் தோன்றினாலும், உருப்படியாக ஏதாவது எழுத வேண்டுமே..

ப்ளாக்ஸ்வரா இணைய இசைக்குழுவில் பல பாடல்கள் கேட்டு ரசிக்கத் தகுந்தவை. இனிய குரல் படைத்தோர் பலர். இனிய குரலை அடைய தளராது முயற்சி செய்து கொண்டுள்ளோரும் உண்டு. திறமையும், குரல்வளமும் படைத்தோர்களில் ஒருவர் மீரா மனோகர். வட கலபோர்னியாவில் வாழும் இப்பாடகி, மேரத்தான் ஓட்ட பந்தயங்களிலும் பங்கெடுப்பவர். கடந்த வருடம் அரை மேரத்தானில் ஓடியவர், அண்மையில் திரும்பவும் பங்கெடுத்து அது பற்றி இங்கு பதிவு செய்துள்ளார்.

அமேரிக்கா வாழ் தெற்காசிய மக்களில் இது போன்றோர் வெகு குறைவு. மகாகவி இருந்திருந்தால் அவன் அகம் மகிழ்ந்திருக்கும். அமேரிக்கா வாழ் தமிழர்கள் சார்பாக மீரா மனோகருக்கு நல் வாழ்த்துகள்.

இனிய குரல் படைத்த மீரா மனோகரின் இசைப்பதிவு இங்கே :ஸ்வரஸ்தானம்